Jan 14, 2013

அசைவம் மனிதனின் தேவையா அல்ல ஆசையா?






மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதல் இடம் என்றுமே உணவுக்கே ஆகும். மற்ற விலங்குகளைப் போலவே மனிதனிற்கும் இயற்கையாகத் தோன்றும் பசி எனும் தேவையினைப் போக்கவே எமக்கு உணவு தேவைப்படுகின்றது. எனினும் இன்று நாம் பசியை ருசியாகப் பார்க்கின்றோம். இன்று நாம் உணவை ருசிக்காகவே உண்கின்றோம். சரி விடயத்திற்கு வருவோம். உணவு முறைகளில் சைவ உணவு முறைதான் சிறந்ததாகும். இதனையே எமது மதங்கள் தொட்டு இன்றைய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூட இதனையே சொல்கின்றன. சரி உணவைப் பற்றி எமது சமயங்கள் என்ன சொல்கின்றன என பார்ப்போமானால். கிறிஸ்த்தவ சமயத்தவர்களின் முதல் நூலாகிய பைபிளின் முதலாகமத்தில் கடவுள் உலகத்தை தோற்றுவித்து. ஆதாம், ஏவாளைப் படைத்த பின் அவர்களை நோக்கி “நிலத்தின் மேலுள்ள வித்துக்களைத் தரும் ஒவ்வொரு பூண்டினையும், வித்துக்களோடு பழத்தையும் தரும் ஒவ்வொரு மரத்தையும் நான் தங்களின் உணவுக்காக தந்திருக்கிறோன். இவற்யை உமக்கு உணவாக்குக” என கூறி அருளினார் என விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. புத்த சமயத்திற்கு முற்ப்பட்ட சமண சமயமானது கொல்லாமை, புலால் உண்ணாமை உண்ணும் அறத்தின் கண் தலை சிறந்தது என்று வருதலும் எல்லோரும் உணர்ந்ததாகும். எனினும் மனிதனின் மிதமிஞ்சிய அவா அவனை முழு அசைவ உண்ணியாக மாற்றியுள்ளது. நூன் அறிந்த உண்மை அசைவம் கண்ணை மறைக்கும் அசைவ விரும்பிகளின் கருத்து யாதெனில். அசைவ உணவுகளே சத்து நிறைந்தவை, அசைவமே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, வழி வழியாக சாப்பிட்டு வரும் முறையிலிருந்து மாறுபட விரும்பாமல் வருந்துகின்றோம், ருசிக்கு நாக்கும் மனமும் பழகி விட்டது, சந்தர்ப்பம் அமைவதில்லை இவையே இவர்களின் பெறுமதிமிக்க கருத்துக்களாகும். இப்படியான போலி சாட்டுக்களை கைவிட்டு சைவத்தை நாடினால் யாருக்கு நன்மை கிடைக்ம். என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை போல. சைவ உணவுகளை உண்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்ப்போமானால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை. சைவ உணவுகளின் செரிமானம் எளிதாக நடைபெறும், உடலில் கிருமிகள் தங்க இடம் கொடுக்காது, உடலின் எடை அதிகரிக்காது, சைவ உணவுகளில் நார்ச் சத்துக்கள் அதிகமாகக் கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இருக்காது. நன்கு பசி உண்டாகும், மனதிற்கும் உடலிற்கும் ஓர் புத்துணர்ச்சியினைக் கொடுக்கும் வல்லமை கொண்டமை சைவ உணவுகள். இப்படி சைவ உணவினால் உண்டாகும் நன்மைகளினை அடுக்கிக் கொண்டே போகலாம். மாமிசத்திலும் பார்க்க கீரைகள், தானியங்கள், மரக்கறி காய் வகைகள் இவற்றிலுள்ள ஊட்டசத்து இரு மடங்காக உள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை. மாமிசத்தில் இருக்கும் புரதத்திலும் பார்க்க பட்டானியிலும், கடலையிலும் இருக்கும் புரதம் இரு மடங்காகும். சில புத்தி மான்களின் கருத்து யாதெனில் இவ்வுலகில் மற்றைய விலங்குகளைப் படைத்தது மனிதனின் பசியைப் போக்கத்தான் என்கின்றனர். சரி அப்படியானால் உதாரணம் ஒன்றைப் பாப்போம். சிங்கம், புலி என்பவை பிறவி அசைவ உண்ணி விலங்குகளாகும். இவ் விலங்குகளின் உடல் அமைப்பினைப் பாருங்கள் கூரிய நகங்கள், கூரிய பற்கள், பாய்ந்து ஒரு விலங்கை வேட்டையாடத்தக்க கால்கள் உடலமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. இறைவன் மனிதனுக்கு அமைத்துள்ள உடலமைப்பினைப் பாருங்கள். மனிதால் இவ்வுலகில் எந்தவொரு ஆயுதமும் இல்லாமல் ஒரு சிறு விலங்கையாவது பிடித்து வேட்டையாட முடியுமா அல்லது கொல்லத்தான் முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள் மனிதன் சைவ உண்ணியாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதர்களாகிய நாம் பிறவிச் சைவர்கள். மனிதன் கருவிகளையும் ஆயுதங்களையும் கண்டுபிடிக்க முன்னர் எந்தவொரு விலங்கினத்திற்கும் தீங்கு செய்யாது. மனிதன் இய்கையோடு இணைந்து வாழ்ந்தான். ஆயுதங்களை கண்டுபிடித்த பின்னரே அவன் வேட்டையாடத் தொடங்கினான். இயற்கையில் மனிதனின் அக, புற உடலமைப்புக்கள் சைவ உணவுகளுக்கு ஏற்ற விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமிசம் போன்றவற்றை கிழித்து உண்பதற்கு ஏற்ற வகையிலான முன் கூர்மைப் பற்கள் மனிதனுக்கு இல்லை, மாமிச பட்சிணிகளுக்கு குடல் சிறிதாக இருக்கும். ஆனால் எமது குடலோ மிக நீண்ட சுருள் சுருளாக அமைக்கப்பட்டுள்ளது. என்பது நீங்கள் அறிந்த விடயம். இதனால் அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது. இதனால் உடலில் நச்சுத்தன்மை ஏற்ப்படுகின்றது. இதுவே மனிதனின் அழிவுக்கு வழி செய்கின்றது. மற்றம் இயற்கையாக மாமிச பட்சிணியாக படைக்கப்பட்ட விலங்குகளுக்கு நாக்கில் வியர்க்கும் அவற்றின் உமிழ்நீர் அமிலத் தன்மையாகக் இருக்கும். ஆனால் மனிதனிற்கு ஆடு, மாடு மான், யானை போன்ற சைவ பட்சிணிகளைப்போன்று நாக்கில் வியர்ப்பதில்லை. எனவே இப்போது மனிதன் சைவ உணவுகளிற்கு ஏற்ற வகையிலேயே தான் மனிதனின் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று உங்களிற்கு புரிந்திருக்கும் அசைவ உணவுகள் மனிதனிற்கு தீமைகளை வாரி வழங்குகின்றன என்பது நாம் அறிந்தும் அறியாதபோல் இருக்கும் விடயமாகும். மரக்கறிகளிலும், பழங்களிலும் பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவது உண்மையாகும். இது எமது உடலிற்கு பெரும் பாதிப்பை ஒரு போதும் ஏற்ப்படுத்தாது. ஆனால் மாமிசத்திற்காக வளர்க்கப்படும் மிருகங்களும் இவற்றைத்தான் உண்கின்றன. மரக்கறிகள், பழங்கள் அவற்றில் தங்கியுள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை விட அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து மாமிசத்திற்காக வளர்க்கப்படும் மிருகள்களில் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. மனிதன் வாழ்வதும் சாவதும் உணவால் அதற்கு அமைவாக அசைவ உணவுகளினை தொடர்ந்து உண்பதால் எமது உடலில் முதலில் மிகவும் பாதிக்கப்படும் உருப்பு சிறுநீரகம் ஆகும். அசைவம் உண்ணுவதால் இரத்தத்தில் தோன்றும் விசத்தன்மையை நீக்க பெரிதும் போராடுகின்றது சிறுநீரகம். அசைவ உணவுகளால் சைவ உணவு உண்பவர்களின் சிறு நீரகத்தை விட மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உடபடுகின்றது சிறுநீரகம். ஆசைவ உணவு செரிமானம் ஆகும் போது புலால் உணவிலிருந்து வெளிப்படும் சக்தி புற்று நோய் உண்டாககும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. அனைவரும் அறிந்த விடயம் இஸ்லாம் மதத்தவர்களின் அன்றாட உணவாக மாமிசம் காணப்படுகின்றது. வைத்தியசாலைகளில் பார்தீர்களானால் முதலிடத்தில் இருப்பது இஸ்லாம் மதத்தவர்கள். பத்திரிகைகளைப் பார்த்திர்களானால் தினசரி ஓரு விளம்பரம் சிறுநீரகம் தேவை. இவையல்லாம் எதனால் ஏற்படுகின்றது. நீங்கள் போசக்கான உணவு என உண்னும் மாமிசத்தால் தானே! சரி விடயத்திற்கு வருவோம். அசைவ உணவுகள் அதிக கொழுப்புத்தன்மை கொண்டதாககவும் குறைந்த நார்ச்சத்து கொண்டதாகவும் இருப்பதால் செரிமானம் நடைபெற அதிக நேரமாகின்றது. அதனால் மலச்சிக்கல் தோன்றுகின்றது. இந்த மலச்சிக்கலே வேறு பல நோய்களை உண்டு பண்னும் திறமை கொண்டதாகும். அசைவ உணவுகளை பற்றிய முக்கியமான விடயம் யாதெனில் உணவுகயுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு கொழுப்பு ஏற்றுவதற்காக 270 வகையான ஹோர்மோன்கள் கொடுக்கப்படுகின்றன என்பது எம்மை வியக்க வைக்கும் ஓர் உண்மையாகும். இம் மருந்தின் செயல்ப்பாடு விலங்கு பிறக்கும் முன்பே தொடங்கி பின்னும் நாம் அதன் மாமிசத்தை உண்பதாலும் எம்மூலம் தொடர்கின்றது. சைவ உணவுகளால் மனிதனின் நோய் எதிர்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாது. மனிதனின் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறவும் சைவ உணவுகள் துணைபுரிகின்றன.. விளக்கமாக சொல்லப் போனால் ஓடும் தண்ணீரில் நுளம்பு தங்குவதில்லை. அதேபோல் ஓடும் இரத்த ஓட்டத்தில் எந்தக் கிருமிகளும் தங்காது. அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதை உணர்ந்து பெரும்பாலான வெளிநாட்டவர்கள் அசைவத்தை முற்றாக கைவிட்டு சைவத்திற்கு மாறுகின்றனர். ஆனால் காணததை கண்டவர்கள் போல் நம்மவர்கள்; அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். உலகப் பரசித்தி பெற்ற ஐன்ஸ்டைன், பெர்னாட்சா போன்றவர்கள் அசைவத்திலிருந்து சைவத்து மாறியவர்களே ஆவர். அசைவம் உண்பவர்களிற்கு நுண்ணுணர்வும் பேரரிவும் இல்லாமல் போவதோடு உடம்பும் பொலிவிலந்து போகின்றது. அதை அசைவம் உண்பவர்கள் நன்கு அறிவர். அசைவ உணவுகள் மனிதனின் உடலை மட்டுமல்லாது மனதையும் அழுக்காக்கின்றது. இதற்கு உதாரணமாக சைவ உணவு உண்பவர்களைவ விட அசைவ உணவு உண்பவர்களே அதிக குற்றவியல் நிகழ்ச்சிகளில் இடுபடுகின்றனர். ஒரு உயிரினைக் கொண்று அதன் சதையை சுவைக்கும் குணம் படைத்தவனின் மனம் மாசானதாக தானே இருக்கும் பாசம் பரிவு இவை அவன் கண்களிற்கு புலப்படாது. எல்லாம் போலியாகவே இருக்கும். கனியிருக்க காயைக் கவர்வது தான் மனித இயல்பு. எத்தனையோ வகையான போசாக்கு நிறைந்த பச்சை காய் கனிகள், கீரைகள் இருக்க ஏன் இறந்த ஒரு விலங்கின் சடலத்தை புசிப்பதற்கு மனிதன் ஆசைப்படுகின்றான். சுவைக்காக உண்கின்றான் என்றும் கூறமுடியாது மரக்கறிகளில் இல்லாத சுவையா மாமிசத்தில் உள்ளது. அதற்கு காரணம் மனிதனின் அவா என்று தான் கூற வேண்டும். சைவ உணவுகளை நீங்கள் தினமும் உண்பதால் நீங்கள் ஒன்றும் மடிந்து விட மாடடீர்கள். நீங்கள் தான் ஆரோக்கியம் நிறைந்த சமூகத்தினை உருவாக்குவீர்கள். உங்களின் வாழ்க்கைச் செலவு குறையும் மாமிசத்திற்கும் போசாக்கான மரக்கறிகளுக்குமான விலையை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் மாதம்தோரும் வைத்தியசாலையை நாடவேண்டிய அவசியமில்லை. நீங்கள் சைவத்தை நாடினால் உங்களிற்கும் நன்மை கிடைக்கும் வாயில்லா ஐந்தறிவு விலங்குகளிற்கும் நன்மை கிடைக்கும். உடனடியாக அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை படிப்படியாக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். சைவ உணவு எமது உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி மன ஆரோக்கியத்தையும் தேக ஆரோக்கியமும் ஆற்றலும் கிட்டி, ஆயுள் கூடி, பெரு வாழ்வு கிட்டும் என இயற்கை விதி கூறுகின்றது. எனவே சைவத்தை உண்டு நலமாய் வாழ முயற்சியுங்கள். உங்கள் முடிவு  உங்கள் உணவில்.