மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதல் இடம் என்றுமே உணவுக்கே ஆகும். மற்ற விலங்குகளைப் போலவே மனிதனிற்கும் இயற்கையாகத் தோன்றும் பசி எனும் தேவையினைப் போக்கவே எமக்கு உணவு தேவைப்படுகின்றது. எனினும் இன்று நாம் பசியை ருசியாகப் பார்க்கின்றோம். இன்று நாம் உணவை ருசிக்காகவே உண்கின்றோம். சரி விடயத்திற்கு வருவோம். உணவு முறைகளில் சைவ உணவு முறைதான் சிறந்ததாகும். இதனையே எமது மதங்கள் தொட்டு இன்றைய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூட இதனையே சொல்கின்றன. சரி உணவைப் பற்றி எமது சமயங்கள் என்ன சொல்கின்றன என பார்ப்போமானால். கிறிஸ்த்தவ சமயத்தவர்களின் முதல் நூலாகிய பைபிளின் முதலாகமத்தில் கடவுள் உலகத்தை தோற்றுவித்து. ஆதாம், ஏவாளைப் படைத்த பின் அவர்களை நோக்கி “நிலத்தின் மேலுள்ள வித்துக்களைத் தரும் ஒவ்வொரு பூண்டினையும், வித்துக்களோடு பழத்தையும் தரும் ஒவ்வொரு மரத்தையும் நான் தங்களின் உணவுக்காக தந்திருக்கிறோன். இவற்யை உமக்கு உணவாக்குக” என கூறி அருளினார் என விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. புத்த சமயத்திற்கு முற்ப்பட்ட சமண சமயமானது கொல்லாமை, புலால் உண்ணாமை உண்ணும் அறத்தின் கண் தலை சிறந்தது என்று வருதலும் எல்லோரும் உணர்ந்ததாகும். எனினும் மனிதனின் மிதமிஞ்சிய அவா அவனை முழு அசைவ உண்ணியாக மாற்றியுள்ளது. நூன் அறிந்த உண்மை அசைவம் கண்ணை மறைக்கும் அசைவ விரும்பிகளின் கருத்து யாதெனில். அசைவ உணவுகளே சத்து நிறைந்தவை, அசைவமே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, வழி வழியாக சாப்பிட்டு வரும் முறையிலிருந்து மாறுபட விரும்பாமல் வருந்துகின்றோம், ருசிக்கு நாக்கும் மனமும் பழகி விட்டது, சந்தர்ப்பம் அமைவதில்லை இவையே இவர்களின் பெறுமதிமிக்க கருத்துக்களாகும். இப்படியான போலி சாட்டுக்களை கைவிட்டு சைவத்தை நாடினால் யாருக்கு நன்மை கிடைக்ம். என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை போல. சைவ உணவுகளை உண்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்ப்போமானால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை. சைவ உணவுகளின் செரிமானம் எளிதாக நடைபெறும், உடலில் கிருமிகள் தங்க இடம் கொடுக்காது, உடலின் எடை அதிகரிக்காது, சைவ உணவுகளில் நார்ச் சத்துக்கள் அதிகமாகக் கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இருக்காது. நன்கு பசி உண்டாகும், மனதிற்கும் உடலிற்கும் ஓர் புத்துணர்ச்சியினைக் கொடுக்கும் வல்லமை கொண்டமை சைவ உணவுகள். இப்படி சைவ உணவினால் உண்டாகும் நன்மைகளினை அடுக்கிக் கொண்டே போகலாம். மாமிசத்திலும் பார்க்க கீரைகள், தானியங்கள், மரக்கறி காய் வகைகள் இவற்றிலுள்ள ஊட்டசத்து இரு மடங்காக உள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை. மாமிசத்தில் இருக்கும் புரதத்திலும் பார்க்க பட்டானியிலும், கடலையிலும் இருக்கும் புரதம் இரு மடங்காகும். சில புத்தி மான்களின் கருத்து யாதெனில் இவ்வுலகில் மற்றைய விலங்குகளைப் படைத்தது மனிதனின் பசியைப் போக்கத்தான் என்கின்றனர். சரி அப்படியானால் உதாரணம் ஒன்றைப் பாப்போம். சிங்கம், புலி என்பவை பிறவி அசைவ உண்ணி விலங்குகளாகும். இவ் விலங்குகளின் உடல் அமைப்பினைப் பாருங்கள் கூரிய நகங்கள், கூரிய பற்கள், பாய்ந்து ஒரு விலங்கை வேட்டையாடத்தக்க கால்கள் உடலமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. இறைவன் மனிதனுக்கு அமைத்துள்ள உடலமைப்பினைப் பாருங்கள். மனிதால் இவ்வுலகில் எந்தவொரு ஆயுதமும் இல்லாமல் ஒரு சி
Jan 14, 2013
அசைவம் மனிதனின் தேவையா அல்ல ஆசையா?
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதல் இடம் என்றுமே உணவுக்கே ஆகும். மற்ற விலங்குகளைப் போலவே மனிதனிற்கும் இயற்கையாகத் தோன்றும் பசி எனும் தேவையினைப் போக்கவே எமக்கு உணவு தேவைப்படுகின்றது. எனினும் இன்று நாம் பசியை ருசியாகப் பார்க்கின்றோம். இன்று நாம் உணவை ருசிக்காகவே உண்கின்றோம். சரி விடயத்திற்கு வருவோம். உணவு முறைகளில் சைவ உணவு முறைதான் சிறந்ததாகும். இதனையே எமது மதங்கள் தொட்டு இன்றைய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூட இதனையே சொல்கின்றன. சரி உணவைப் பற்றி எமது சமயங்கள் என்ன சொல்கின்றன என பார்ப்போமானால். கிறிஸ்த்தவ சமயத்தவர்களின் முதல் நூலாகிய பைபிளின் முதலாகமத்தில் கடவுள் உலகத்தை தோற்றுவித்து. ஆதாம், ஏவாளைப் படைத்த பின் அவர்களை நோக்கி “நிலத்தின் மேலுள்ள வித்துக்களைத் தரும் ஒவ்வொரு பூண்டினையும், வித்துக்களோடு பழத்தையும் தரும் ஒவ்வொரு மரத்தையும் நான் தங்களின் உணவுக்காக தந்திருக்கிறோன். இவற்யை உமக்கு உணவாக்குக” என கூறி அருளினார் என விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. புத்த சமயத்திற்கு முற்ப்பட்ட சமண சமயமானது கொல்லாமை, புலால் உண்ணாமை உண்ணும் அறத்தின் கண் தலை சிறந்தது என்று வருதலும் எல்லோரும் உணர்ந்ததாகும். எனினும் மனிதனின் மிதமிஞ்சிய அவா அவனை முழு அசைவ உண்ணியாக மாற்றியுள்ளது. நூன் அறிந்த உண்மை அசைவம் கண்ணை மறைக்கும் அசைவ விரும்பிகளின் கருத்து யாதெனில். அசைவ உணவுகளே சத்து நிறைந்தவை, அசைவமே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, வழி வழியாக சாப்பிட்டு வரும் முறையிலிருந்து மாறுபட விரும்பாமல் வருந்துகின்றோம், ருசிக்கு நாக்கும் மனமும் பழகி விட்டது, சந்தர்ப்பம் அமைவதில்லை இவையே இவர்களின் பெறுமதிமிக்க கருத்துக்களாகும். இப்படியான போலி சாட்டுக்களை கைவிட்டு சைவத்தை நாடினால் யாருக்கு நன்மை கிடைக்ம். என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை போல. சைவ உணவுகளை உண்பதால் உண்டாகும் நன்மைகளைப் பார்ப்போமானால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டவை. சைவ உணவுகளின் செரிமானம் எளிதாக நடைபெறும், உடலில் கிருமிகள் தங்க இடம் கொடுக்காது, உடலின் எடை அதிகரிக்காது, சைவ உணவுகளில் நார்ச் சத்துக்கள் அதிகமாகக் கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இருக்காது. நன்கு பசி உண்டாகும், மனதிற்கும் உடலிற்கும் ஓர் புத்துணர்ச்சியினைக் கொடுக்கும் வல்லமை கொண்டமை சைவ உணவுகள். இப்படி சைவ உணவினால் உண்டாகும் நன்மைகளினை அடுக்கிக் கொண்டே போகலாம். மாமிசத்திலும் பார்க்க கீரைகள், தானியங்கள், மரக்கறி காய் வகைகள் இவற்றிலுள்ள ஊட்டசத்து இரு மடங்காக உள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை. மாமிசத்தில் இருக்கும் புரதத்திலும் பார்க்க பட்டானியிலும், கடலையிலும் இருக்கும் புரதம் இரு மடங்காகும். சில புத்தி மான்களின் கருத்து யாதெனில் இவ்வுலகில் மற்றைய விலங்குகளைப் படைத்தது மனிதனின் பசியைப் போக்கத்தான் என்கின்றனர். சரி அப்படியானால் உதாரணம் ஒன்றைப் பாப்போம். சிங்கம், புலி என்பவை பிறவி அசைவ உண்ணி விலங்குகளாகும். இவ் விலங்குகளின் உடல் அமைப்பினைப் பாருங்கள் கூரிய நகங்கள், கூரிய பற்கள், பாய்ந்து ஒரு விலங்கை வேட்டையாடத்தக்க கால்கள் உடலமைப்பைக் கொண்டு காணப்படுகின்றது. இறைவன் மனிதனுக்கு அமைத்துள்ள உடலமைப்பினைப் பாருங்கள். மனிதால் இவ்வுலகில் எந்தவொரு ஆயுதமும் இல்லாமல் ஒரு சி
Subscribe to:
Posts (Atom)