ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற பதம் முற்றாகவே அற்றுப்போய் அபிவிருத்தி என்ற ஒரு மாயை எமது இனத்தை சூழந்து வரும் இந்த வேளையில் தாயகத்தின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் முன்னெடுத்த அபிவிருத்தியின் விளைவுகள் என்ன?தற்கால அரசியலில் நாம் சந்திக்கப்போகும் பின்னடைவுகள் என்ன என்பது குறித்து ஆதாரங்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை ஒன்று திரட்டி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் யாழ் மாவட்ட முன்னாள் வேட்பாளரும், பிரபல பொருளியல் விரிவுரையாளருமான திரு சி வரதராஜன் அவர்கள் ஈழம் ஈ நியூஸ் இற்காக (www.eelamenews.com) எழுதும் தொடர் இது.
இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பது சிங்கள மக்களை தமிழர் தாயகத்தில் குடியமர்த்துவதையே நோக்கமாகக் கொண்டது என்பதையே கடந்தகால அனுபவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய அபிவிருத்தித் திட்டம் கல்லோயா அபிவிருத்தித் திட்டமாகும். 1949ம் ஆண்டு 51ம் இலக்கச் சட்டத்தின்கீழ் கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது. இச் சட்டத்தின்படி இச் சபையின் பிரதான நோக்கமாக ‘அதனது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஆகக்கூடுதலான எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகளின் குடும்பங்களைக் குடியமர்த்த வேண்டும்’ என்பது வரையறுக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான திரு.டீ.எஸ். சேனநாயக்கா 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி இங்கினியாகலையில் கல்லோயாத் திட்டத்தின்கீழ் முதல் மரத்தினை சம்பிரதாயபூர்வமாக தமது கையால் வெட்டி இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தபோது பின்வருமாறு கூறினார்.
‘இன்று என்னால் வெட்டப்பட்ட முதல் மரம் இப்பிரதேச அபிவிருத்தியில் முதற் கருவாக்கத்தின்; மூலக்கூறு. இக்கரு தொடர்ந்து வளர்ச்சியுறவேண்டும். இக் கரு சிதைவடையாமல் பாதுகாக்கப்படவேண்டும். இது இப் பிரதேச மக்களின் தலையாய கடமையாகும். கடற்கரைப் பிரதேசத்தில் தான் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள். இம் மக்கள் கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழவேண்டும். அவ்வாறு அவர்கள் வந்து குடியேறாவிட்டால் பிற பிரதேசத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவார்கள்.’
திரு.டீ.எஸ். சேனநாயக்காவின் பேச்சின் இறுதி வசனம் கல்லோயாத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. பிற பிரதேசத்தவர்கள் என்பது சிங்களவர்களைத் தவிர வேற எவரையும் குறிக்கமாட்டாது என்பது வெளிப்படை.
எனவே சிங்கள மக்களைப் பெருமளவில் இப் பிரதேசத்தில் குடியமர்த்துவதனை நோக்கமாகக் கொண்டே கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை திரு.டீ.எஸ். சேனநாயக்கா தனது அங்குரார்ப்பண உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் கல்லோயாத் திட்டப் பிரதேசத்தில் முதல் மரத்தை வெட்டிச் சாய்க்கின்றபோது ‘இப் பிரதேசத்தில் பரம்பரையாக வேரூன்றியிருக்கும் தமிழ் இனத்தை இம் மரத்தினைப் போலவே அடியோடு வெட்டிச் சாய்க்கவேண்டும்’ என்று எண்ணியிருப்பாரோ தெரியவில்லை.
தமிழர் தாயகத்தைச் சூறையாடி தமிழ் மக்களை அகதிகளாகத் துரத்தியடித்து அப் பிரதேசங்களை சிங்களமயமாக்குவது என்ற அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டத்தின் முதல் அடியே கல்லோயாக் குடியேற்றத் திட்டமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்த அதேகாலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் அல்லைஇ கந்தளாய் குடியேற்றத் திட்டங்களையும் அரசாங்கம் ஆரம்பித்தது. இவற்றின் விளைவாக கிழக்குமாகாணத்தின் வடபகுதியும் தென்பகுதியும் சமகாலத்தில் சிங்களமயமாக்கலுக்கு உள்ளாகியது.
இக் குடியேற்றத் திட்டங்களின் விளைவுகளை இவ்விரண்டு மாவட்டங்களின் சனத் தொகைப் பரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடியும். 20ம் நூற்றாண்டின் முதலாவது குடிசன மதிப்பீடு 1901ம் ஆண்டும் இறுதிக் குடிசன மதிப்பீடு 1981ம் ஆண்டும் மேற்கொள்ளப்பட்டது.
1901ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக அப்போதிருந்த தற்போதைய அம்பாறை மாவட்டப் (கல்லோயாக் குடியேற்றத் திட்டம் ஆரம்பித்துப் பத்தாண்டுகளின் பின் (1961ம் ஆண்டு) மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது) பிரதேசத்தில் 6175 சிங்களவர்கள் மாத்திரம் வாழ்ந்தனர்.
இது இப் பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் 9.8 சதவீதம் மட்டுமேயாகும். இந்த 6175 பேரில் 3302 பேர் (54 சதவீதத்தினர்) மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியுள்ள பிந்தனபற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும். மேலும் 994 பேர் (16 சதவீதத்தினர்) அம்பாந்தோட்டை மற்றும் மொனராகல மாவட்டங்களை அண்டியுள்ள பாணமை பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும்.
1981ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி அம்பாறை மாவட்டத்தில் 1,46,943 சிங்களவர்கள் வாழ்ந்தனர். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 37.8 சதவீதமாகும். மேலும் அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 78.3 சதவீத பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தின் சாதனை இதுவேயாகும்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1901ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி 1203 சிங்களவர்கள் மாத்திரம் வாழ்ந்தனர். இது இப் பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் 4.2 சதவீதம் மட்டுமேயாகும். இந்த 1203 பேரில் 614 பேர் (51 சதவீதத்தினர்) அனுராதபுரம் மாவட்டத்தை அண்டியுள்ள கட்டுக்குளம்பற்று மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும். மேலும் 314 பேர் (26 சதவீதத்தினர்) திருகோணமலை நகரத்தில் வாழ்ந்தவர்களாவர்.
1981ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி திருகோணமலை மாவட்டத்தில் 97550 சிங்களவர்கள் வாழ்ந்தனர். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 35.6 சதவீதமாகும். மேலும் திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இத அல்லை. கந்தளாய்க் குடியேற்றத் திட்டங்களின் சாதனையாகும்.
மறைந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் பின்வருமாறு கூறினார். பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் தொடர்ந்து வாழ்வதற்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதலாவது, எண்ணிக்கை ரீதியான பலம். இரண்டாவது, அதனது வாழ்விடம். ஆனால் இம் முன்தேவைகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் தகர்க்கப்படுகின்றன. ஏழு இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பானது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை அரைவாசியாக் குறைத்துள்ளது.
இப்பொழுது இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறிக்கின்றது. இன்று இது கல்லோயாவில். நாளை இது கந்தளாயில் நடைபெறும். பின்னர் பதவியா, வவுனியா, மன்னர் எனத் தொடரும். இந் நடவடிக்கையின் ஆரம்பமாக அமைந்துள்ள கல்லோயாத் திட்டத்தினால் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தாங்கள் வாழும் பிரதேசங்களில் சிறுபான்மைச் சமூகங்களாக மாறிவிடுவர். தந்தை செல்வநாயகம் அவர்கள் 1951ம் ஆண்டு கூறிய விடயம் இன்று எம் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
அபிவிருத்தியின் பெயராலேயே இம் மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்தன. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து 1980 வரை தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகவும் வாழ்விடங்களுக்காகவும் அமைதியானமுறையில் சாத்வீகமான வழிகளில் போராடினர். அக்காலப்பகுதியில்தான் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு சொந்த மண்ணில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.
1980 வரை தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக அகிம்சைவழியில் போராடினர். அப் போராட்டங்களை அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தாமல் தனது இரும்புக் கரங்களால் அடக்கியவாறு சிங்களமயமாக்கலைத் தொடர்ந்து மேற்கொண்டது. 1980களிலிருந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயதப் போராட்டமாக மாறியது. இப் போராட்டம் 2008 வரை அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளாதவாறு தடுத்து வைத்திருந்தது. இவ் ஆயுதப்போராட்டமும் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மீண்டும் அதிதீவிரத்துடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதனைக் காணக் கூடியதாவுள்ளது.
தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களும்சரி ஆயுதப் போரட்டங்களும்சரி அரசாங்கத்தினால் முறியடிக்கப்பட்டாலும் கூட இப் போராட்டங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் இன்றும் உயிருடன்தான் இருக்கின்றன.
24 மணிநேர லக்ஸபான மின்சாரம், யாழ்தேவி புகையிரதசேவை, தடையில்லாத வீதிப் போக்குவரத்து, இராணுவ மற்றும்; போலீஸ் கெடுபிடியின்றி நள்ளிரவிலும் நடமாடுதல், நள்ளிரவு வரையிலான கோயில் திருவிழாக்கள், விடிய விடிய இசைக் கச்சேரிகள் இவைதான் இன்று மக்களின் தேவைகளாகக் காட்டப்படுகின்றன. இவைகள் இல்லாமலிருந்ததுதான்; தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்றும் எனவே இவற்றை வழங்கும்போது தமிழ்மக்களின் பிரச்சைனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றவகையிலான ஒரு கருத்துருவாக்கம் இன்று ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இன்றைய இளையசமுதாயத்திற்கு இவ்வாறான கருத்தே ஊட்டப்பட்டு வருகின்றது.
ஆனால் இன்று எவையெல்லாம் தமிழ் மக்களுக்குத் தேவை என்று கூறுகின்றோமோ அவையெல்லாம் நாம் ஏற்கனவே 1980 களுக்கு முன்னர் நாம் அனுபவித்துக் கொண்டிருந்தவைதான். இவை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இளைஞர்கள் ஏன் ஆயதம் தூக்கினார்கள் – தமிழ் மக்கள் ஏன் அதற்கு ஆதரவு வழங்கினார்கள் இதற்கான காரணங்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டன அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன.
போராட்டம் தோன்றியமைக்கான காரணங்கள் – பிரச்சனைகள் இன்று மறைந்து போராட்டம் தோன்றியதன் காரணமாக உருவான பிரச்சனைகளே இன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளாகும் என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவே அவற்றைத் தீர்த்துவிட்டால் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகளே கிடையாது என்றவொரு கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.
போராட்டம் நடைபெற்றதனால் உருவாகிய பாரிய பிரச்சனை மக்களின் இடப்பெயர்வாகும். இப் பிரச்சனையின் தன்மையையும் தாக்கத்தையம் குறைத்து மதிப்பிடமுடியாது. குறிப்பாக வன்னி மக்கள் படும் அவலம் எவரையும் கண்ணீர்விட வைக்கும். எனவே இவர்களின் துயரத்திற்கு முதலில் முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அரசாங்கம் மீள்குடியமர்த்தல் என்றபோர்வையில் வடக்கில் சிங்களவர்களைக் குடியமர்த்த எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியது அவசியமாகும். யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கம் காட்டும் அவசரத்தையும் அக்கறையையும் அதே யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடயத்தில் ஏன் காட்டவில்லை.?
யுத்தம் முடிந்த ஒரு வருடத்திற்குள் வன்னியிலும் யாழப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியமர்த்த முடியுமாயின்இ யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் மக்களை ஏன் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாதுள்ளது?
எனவே அரசாங்கம் 1950 – 1980 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் எவ்வாறு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டதோ அதேபோன்று எதிர்வருங்காலங்களில் வடக்கையும், சிங்களமயமாக்கப் போகின்றது. நேற்று கிழக்கில் நடந்தது. இன்று வடக்கில் நடைபெறத் தொடங்குகின்றது. நாளை அது தீவிரமடையும். ஆனால் ஓரேயொரு வேறுபாட்டை மட்டும் அவதானிக்கலாம்.
அன்று கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றபோது கட்சிபேதமின்றி அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் அதனைத் தீவிரமாக எதிர்த்தனர். ஆனால் இன்று வடக்கில் நடைபெறப்போகும் சிங்களக் குடியேற்றங்கள் பதவியிலிருக்கும் பல தமிழ் அரசியற் தலைவர்களின் ஆசியோடும் ஒரு சிலரின் போலியான எதிர்ப்புடனும் அரங்கேறப் போகின்றது என்பதுதான் வேதனையான விடயம்.
அபிவிருத்தி என்ற பெயரில் ஒரு குழந்தையை எமது கையில் ஒப்படைத்துவிட்டு எம்மிடமுள்ள தொட்டிலைப் பறிக்கப் போகின்றார்கள். குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வாழ்விடமின்றி சிறிது காலம் நாடோடிகளாகத் திரிவோம். பின்னர் குழந்தையும் இறக்கும். நாமும் அழிவோம்.
அபிவிருத்தி என்று கூறி கிழக்கின் வடபகுதியையும் (திருகோணமலை மாவட்டம்) தென் பகுதியையும் (அம்பாறை மாவட்டம்) இழந்துவிட்டோம். இனி இவற்றை மீளப் பெறமுடியாது. எஞ்சியிருப்பது மட்டக்களப்பு மாவட்டமும் வடமாகாணமும் தான். இவற்றையும் தொலைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எல்லைகளை நோக்கி நாம் நகராவிட்டால் எல்லைகள் எம்மை நோக்கி நகரும்
1977ம் ஆண்டுத் தேர்தலில்தான் சேருவல என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டி.எல்.லீலாரட்ன என்ற சிங்கள இனத்தவர் முதல் தடவையாக இம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். உண்மை இவ்வாறிருக்க ஏதோ அண்மையில்தான் திருகோணமலை பறிபோய்விட்டது மாதிரியும் திருகோணமலைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தான் அதனைக் காப்பாற்றப் போகின்றோம் என்ற மாதிரியும் பலர் பேசுகின்றனர், எழுதுகின்றார்கள். இவ்வாறு பேசுபவர்கள் உண்மையில் திருகோணலையைக் காப்பாற்றப் பாடுபடுகின்றீர்களா? அல்லது சம்பந்தரைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களா? இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த 30 வருடங்களாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தின் மூலம் திருக்கோணமலையைக் காப்பாற்ற முடியாமல்போன நீங்கள் இப்போது யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகின்றீர்கள்.
1921-1946 காலப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றின் பெயரிலேயே திருகோணமலை நகரத்தில் பெருமளவு சிங்களவர்வர்கள் குடியேறினர். இதே நிலை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வரப்போகின்றது. அபிவிருத்தியின் பெயரால் யாழ்ப்பாண சனத்தொகையின் இனவிகிதாசாரம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படப்போகின்றது. இதனைத் தடுக்கப்போகின்றோமா? அல்லது 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வாறு பறிபோனது என்ற வரலாற்றை எழுதப்போகின்றோமா?
.
1977ம் ஆண்டுத் தேர்தலில்தான் சேருவல என்ற சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டு எச்.டி.எல்.லீலாரட்ன என்ற சிங்கள இனத்தவர் முதல் தடவையாக இம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். உண்மை இவ்வாறிருக்க ஏதோ அண்மையில்தான் திருகோணமலை பறிபோய்விட்டது மாதிரியும் திருகோணமலைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தான் அதனைக் காப்பாற்றப் போகின்றோம் என்ற மாதிரியும் பலர் பேசுகின்றனர், எழுதுகின்றார்கள். இவ்வாறு பேசுபவர்கள் உண்மையில் திருகோணலையைக் காப்பாற்றப் பாடுபடுகின்றீர்களா? அல்லது சம்பந்தரைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களா? இலங்கை சுதந்திரம் பெற்ற அடுத்த 30 வருடங்களாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தின் மூலம் திருக்கோணமலையைக் காப்பாற்ற முடியாமல்போன நீங்கள் இப்போது யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகின்றீர்கள்.
1921-1946 காலப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றின் பெயரிலேயே திருகோணமலை நகரத்தில் பெருமளவு சிங்களவர்வர்கள் குடியேறினர். இதே நிலை எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வரப்போகின்றது. அபிவிருத்தியின் பெயரால் யாழ்ப்பாண சனத்தொகையின் இனவிகிதாசாரம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படப்போகின்றது. இதனைத் தடுக்கப்போகின்றோமா? அல்லது 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வாறு பறிபோனது என்ற வரலாற்றை எழுதப்போகின்றோமா?
.
பொருளியல் ஆசிரியர் சி.வரதராஜன்
(முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர்)
(முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர்)
