Aug 16, 2012

நாஸ்ரடாமஸ் மர்ம மனிதன்


உலகில் பைபிளுக்கு அடுத்த படியாக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் என்ன தெரியுமா? “த செஞ்சுரீஸ்” (The Centuries) எனப்படும் நாலடிப்பாடல்களால் வரிக்கப்பட்ட புத்தகம்தான். இதனை எழுதியவர்தான் தீர்க்கதரிசி ”நஸ்ட்ரடாமஸ்”.
1568 ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் மூலப்பிரதி அச்சிடப்பட்டது, என்னதான் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் காணப்பட்டாலும் சொல்லப்பட்ட விடயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.

த செஞ்சுரீஸ் இல் நஸ்ட்ரடாமஸ்சால் எதிர்வுகூறப்பட்டவைகள்
01. 1999 ஆம் ஆண்டு ஏழாம் மாதம்
அச்சத்தை ஊட்டுகிறவன் ஆகாயத்தில் இருந்து வருவான்
மோனிகோல் அரசுக்கெதிராய் மூழும் பயங்கரம் – அதன் முன்னும்பின்னும் செவ்வாயின் ஆதிக்கம்
கடகராசியில் நாற்ப்பத்து ஐந்து டிகிரி நடக்குமந்த பேரழிவு – (10:72)
இத உலகவர்த்தகமையத் தாக்குதலை எதிர்வுகூறும் நிகழ்வாக கருதப்படுகின்றது.
செஞ்கிஸ்த்தான் என்றொரு பயங்கர அரசன் மங்கோலியாவை ஆண்டுவந்தான் அதனால் தீவிரவாதிகளைக்குறிக்க மோனிகோல் என்ற வார்த்தைப்பிரயோகம் நஸ்ட்ரடாமசால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
உலக வரைபடத்தில் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் 40 – 45 டிகிரியி அட்சர ரேகையில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
பிரஞ்சுக்காரரானா நஸ்ட்ரடாமஸ்சின் பிரஞ்சுமொழியிலான இரகசியக்குறிப்புக்கள் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர்களால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டமையால் அவர்களின் மொழிபெயர்ப்பின் போது பல தவறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படிகின்றது, இதனால் ஏற்பட்ட தவறான விளக்கள்களாலும் கால நேர அளவிடைப் பிழைகளாலும் அழிவுகளைத்தடுக்க முடியாமல் போய்விடுகின்றது.
அமெரிக்க நிகழ்வோடு சம்பந்தப்படுகின்ற வேறுபட்ட செய்யுள்களும் நஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் உள்ளன, அவை இவ்வாறு சொல்கின்றன,
”மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஒருநாள் காலையில் மிகக்கொடிய நெருப்பு ஆகாயத்தில் எழுந்தது. ஆர்ட்டிக்கின் வடக்கே உள்ள நாட்டில் அழிவும் மரனமும் நேரும்” (2:91)
“பூமியின் நடுப்பகுதியில் இருந்து கிழம்பும் தீயானது உலகை அதிரவைக்கும் வண்ணம் அந்தப் புதிய நகரத்தின் கோபுரங்களைத் தகர்த்து கலக்கத்தை உருவாக்கும்” (1:87)
புதிய நகரத்தில் 40 – 45 டிகிரி அளவில் ஆகாயத்தில் இருந்து அனல் மழை பொழியும் அதன் பாதிப்பு வெகுதூரத்திற்குப் பரவும் அவர்கள் சான்றுகள் கேட்பார்கள், எங்குபார்த்தாலும் ஒரு கொடிய பயங்கரம் நிலவும், காரணமானவர்கள் எங்கேனும் மறைந்துகொள்வார்கள், வல்லரசுகள் கடுங்கோபங்கொள்ளும்” (6:97), (5:65).
இவ்வாறான தகவல்கள் நஸ்ட்ரடாமஸ் இனால் உலகவர்த்தக மைய அழிவுபற்றி எச்சரித்து எதிர்வுகூறப்பட்டிருந்தன.
02. முதலாம் எலிசபெத்
யார் தூக்கி எறியப்பட்டாளோ அவள் ஆட்சிக்கு மறுபடியும் வருவாள், அவளுடைய பகைவர்கள் சதியாலோசனையில்
இருக்கிறார்கள், அவளது ஆட்சியானது முன்னெப்போதையும் விட வெற்றிகரமானதாக இருக்கும், அவளது மரணம் அவளது எழுபத்தி மூன்றாவது வயதில் கண்டிப்பாக நிகழும் (C.VI.74)
தன்னுடைய குழந்தைப்பருவத்தில் புறக்கணிக்கப்பட்டவள்தான் இந்த முதலாம் எலிசபெத், அவளுடைய சகோதரியின் ஆட்சியுன் போது சதிக்கு இலக்கானவள், எலிசபெத்தின் ஆட்சியுன் போது இங்கிலாந்து அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது, நஸ்ட்ரடாமஸ் சொன்னதுபோல அவள் தனது எழுபத்தி மூன்றாவது வயதில் இறந்துவிட்டாள்.
03.கென்னடி சகோதரர்களின் படுகொலை
“புகழ் பெற்ற அந்த மனிதன் பகல்ப் பொழுதில் ஓர் இடிமின்னல் தாக்கி அழிவான்” (C.I.26)
ஜோன். எப்.கென்னடி 1963 நவம்பர் 22 அன்று சுடப்பட்டு இறந்தார், 1968 ஜீன் 5 அவருடைய சகோதரர் ராபர்ட்.எப்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்.
“போருக்கு பின் அந்த மனிதன் வீழ்வான் அவன் உன்னதமானவன், அவனுடைய மரணம் திடீரென்று சம்பவிக்கும், அவன் பிறக்கும் போதே துறையோடு பிறப்பான், ஆற்றங்கரையோரத்திலே இரத்தக் கறை படியும்” (C.II.57)
ஜோன்.எப்.கென்னடி பிறக்கும்போதே நோயால் பாதிக்கப்பட்டவர், பிறரை கவர்ந்திளுக்கும் ஆழுமை அவரிடம் இருந்ததாக அவரைப்பற்றிய விமர்சனங்கள் சொல்லின்றன, கியூபாவில் ரஸ்ய அதிபர் க்ருஷ்சாவ் ஆயுதத்தளம் அமைக்க முயன்றார் அதனால் ஏற்பட்ட மோதலுக்குப் பின் டல்லாஸ் நகரில் கென்னடி கொல்லப்பட்டர்.

2 comments:

  1. இவருடைய புத்தகத்தின் தமிழ் வடிவம் படித்திருக்கிறேன் நண்பா இருபினும் உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா; தமிழ் வடிவ e-book இணையத்தில் தேடி பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை.

      Delete